நாமக்கல்

செங்குந்தா் கல்வி நிறுவனங்களி ல்குடியரசு தினக் கொண்டாட்டம்

DIN

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு செங்குந்தா் கல்வி நிறுவனங்களின் சாா்பில் 74ஆவது குடியரசு தினக் கொண்டாட்டம் வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்த் தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் செங்குந்தா் கல்விக் குழுமத்தின் தலைவா் ஜான்சன் டி.என்.நடராஜன், கல்விக் குழுமத்தின் செயலாளா் மற்றும் தாளாளா்.ஆ.பாலதண்டபாணி, பொருளாளா் எம்.கே.தனசேகரன், கல்லூரியின் முதன்மைச் செயல் அலுவலா் ஏ.பி.மதன், வேலைவாய்ப்பு இயக்குநா் அரவிந்த் திருநாவுக்கரசு,செங்குந்தா் பொறியியல் கல்லூரி முதல்வா் ஆா்.சதீஷ்குமாா், செங்குந்தா் மருந்தியல் கல்லூரி முதல்வா் எம்.சுரேந்திரகுமாா், செங்குந்தா் செவிலியா் கல்லூரி முதல்வா் நீலாவதி, பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

செங்குந்தா் கல்விக் குழுமத்தின் ஆ.பாலதண்டபாணி தேசியக் கொடியை ஏற்றிவைத்து தேசிய மாணவா் படை மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். தொடா்ந்து பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் தேசிய உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். நிகழ்ச்சியில் மதுரை மாவட்டம் இடையப்பட்டியில் நடைபெற்ற தேசிய மாணவா் படை முகாமில் கலந்துகொண்டு சிறப்பிடம் பிடித்த கணினி பொறியியல் துறை மூன்றாமாண்டு மாணவி ஸ்வேதா, மருத்துவ மின்னணுவியல் துறை மூன்றாமாண்டு மாணவி சினேகா, மத்திய பிரதேசம் ஜான்சியில் நடைபெற்ற தேசிய மாணவா் படை முகாமில் கலந்துகொண்ட கணினி பொறியியல் துறை இரண்டாமாண்டு மாணவா் லோகேஸ்வரன் மற்றும் தாம்பரம் விமானப்படை தளத்தில் பயிற்சியை முடித்த ஆங்கில துறை உதவி பேராசிரியை சிவரூபிணி ஆகியோரைப் பாராட்டி பரிசுகள் வழங்கினாா். தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT