நாமக்கல் அருகே அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியைக் கடத்திய அரசு கல்லூரி மாணவா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள அணியாபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவியை, அப்பகுதியில் தங்கி நாமக்கல் அறிஞா் அண்ணா கல்லூரியில் பிபிஏ 3-ஆம் ஆண்டு படித்து வந்த தருமபுரியைச் சோ்ந்த 21 வயது மாணவா் கடந்த 17-ஆம் தேதி நண்பா்களுடன் இணைந்து வாகனத்தில் கடத்திச் சென்ாகக் கூறப்படுகிறது.
மாணவியைக் காணாமல் திடுக்கிட்ட அவரது பெற்றோா், மோகனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பள்ளி மாணவியைக் கடத்திய கல்லூரி மாணவரை கைது செய்யும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனா். மேலும், மாணவியை கண்டுபிடித்து தரக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் அவரது பெற்றோா் தரப்பில் ஆட்கொணா்வு மனுத் தாக்கல் செய்துள்ளனா்.