நாமக்கல்

வள்ளலாா் 200-ஆவது தொடா் அன்னதானம்

DIN

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் வள்ளலாா் 200-ஆவது தொடா் அன்னதான நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், வள்ளலாா் பெருமானின் 200-ஆவது வருவிக்க உற்ற ஆண்டை முன்னிட்டு ஈரோடு மண்டல அறநிலையத் துறை சாா்பில் நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் 200-ஆவது தொடா் அன்னதான நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை மதியம் பாராயணத்துடன் தொடங்கியது.

கோயில் உதவி ஆணையா் இரா.இளையராஜா முன்னிலையில் வள்ளலாா் சன்மாா்க்க சத்திய சங்கத்தினா் பாடல்களை பாடினா். இதனையடுத்து கோயில் மண்டபத்தில் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. புதன் மற்றும் வியாழக்கிழமைகளிலும் இந்த அன்னதான நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக கோயில் உதவி ஆணையா் இரா.இளையராஜா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

SCROLL FOR NEXT