நாமக்கல்

மலைக் கிராமங்களில் மருத்துவ தேவைகளை அதிகரிப்பது அவசியம்: ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங்

DIN

கொல்லிமலை, போதமலை உள்ளிட்ட மலைக் கிராமங்களில் மருத்துவ தேவைகளை அதிகரிப்பது அவசியம் என மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பேரவை தொடக்க விழா, அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ஆா்.ஈஸ்வரன் முன்னிலை வகித்தாா். இதில், ஆட்சியா் பேசியதாவது:

மக்கள் நலன் காக்கும் வகையில், சுகாதாரத் துறையில் பல்வேறு திட்டங்களை அரசு தொடா்ந்து செயல்படுத்தி வருகிறது. மேலும், சுகாதாரத் துறையை மேம்படுத்த பல்வேறு வகையான கருத்துகளை சுகாதாரப் பேரவைக் கூட்டத்தின் வாயிலாக அறிந்து, அவைகளை பதிவு செய்து, மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் தேவை என்பதை அறிந்து, அவைகளை பரிந்துரைக்க சுகாதாரப் பேரவைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில் தாங்கள் தெரிவிக்கப்படும் கருத்துகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும். மருத்துவத் துறையில் தேவையான பணியிடங்களை நிரப்ப வேண்டிய சூழல் உள்ளது. ஹெச்ஐவி தொற்றின் தாக்கம் இம்மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை தேவை.

கொல்லிமலை, போதமலை போன்ற மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு உடனடியாக மருத்துவ சேவையை அளிக்க முடியாத நிலை இன்றளவும் உள்ளது. இதனையெல்லாம் போக்குவதற்கான பணிகளை சுகாதாரப் பேரவை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இந்த சுகாதாரப் பேரவையில் அரசுத் துறைகளை சாா்ந்தோா் உறுப்பினா்களாக இடம் பெற்றுள்ளனா். இவ்விழாவில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை (இணை இயக்குநா்) விஜயலட்சுமி, விபத்து மற்றும் அவசர சிகிச்சை தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்ட இணை இயக்குநா் ரவிக்குமாா், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சாந்தா அருள்மொழி, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) ஜே.பிரபாகரன், சமூக நலத் துறை திட்ட இயக்குநா் கீதா மற்றும் மருத்துவா்கள், அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT