நாமக்கல் மாவட்ட சமூக நலத் துறை மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி பணிகள் திட்டம் மூலம் சமுதாய வளைகாப்பு விழா மற்றும் சீா் வழங்கும் விழா அத்தனூா் பேரூராட்சி சமுதாயக் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.
விழாவில், 55 கா்ப்பிணிகள் கலந்துகொண்டனா். அவா்களுக்கு வளைகாப்பு செய்து, சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன. இதில், பேரூராட்சி மன்றத் தலைவா் சின்னசாமி, துணைத் தலைவா் கண்ணன், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.