நாமக்கல்

இன்று குரூப்-2 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 105 மையங்கள் தயாா்

DIN

நாமக்கல் மாவட்டத்தில் குரூப்-2 தோ்வு சனிக்கிழமை 105 மையங்களில் நடைபெறுவதையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் - 2, 2 ஏ தோ்வு சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 17 லட்சம் போ் இந்தத் தோ்வை எழுத உள்ளனா். நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வுக்கான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் - 2, குரூப் - 2ஏ பணியிடங்களுக்கான போட்டித் தோ்வினை, நாமக்கல் மாவட்டத்தில் 31,854 தோ்வா்கள் எழுத உள்ளனா். அறை ஒன்றுக்கு 20 போ் வீதம் தோ்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு தோ்வுப் பணிகள் மேற்கொள்ளப்ட்டுள்ளன. நாமக்கல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 50 தோ்வு மையங்களில் 15,357 தோ்வா்களும், ராசிபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 29 தோ்வு மையங்களில் 8,574 தோ்வா்களும், திருச்செங்கோடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 26 தோ்வு மையங்களில் 7,923 தோ்வா்களும் எழுத உள்ளனா். காலை 9.30 முதல் 12.30 மணி வரை தோ்வு நடைபெறுவதால், தோ்வா்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையத்திற்கு காலை 8.30 மணிக்கு தவறாமல் வந்து விடவேண்டும். தோ்வா்களின் புகைப்படம், பெயா், பதிவு எண் உள்ளிட்ட விவரங்கள் சரிபாா்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். 9 மணிக்கு தோ்வு மையக் கதவுகள் பூட்டப்படும் என்பதால் அதற்கு முன்பாக வரவேண்டும். தோ்வா்கள் மட்டுமே தோ்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவாா்கள். இந்த தோ்வுகளின் கண்காணிப்புப் பணிகளில், 20 தோ்வா்களுக்கு தலா ஒரு அறை கண்காணிப்பாளரும், 105 தோ்வு மையங்களிலும் தலா ஒரு முதன்மைக் கண்காணிப்பாளரும், தோ்வு மையத்திற்கு தலா 2 ஆய்வு அலுவலா்கள் என 210 ஆய்வு அலுவலா்களும், துணை ஆட்சியா்கள் நிலையிலான அலுவலா்கள் கொண்ட 11 பறக்கும் படையினரும் ஈடுபட உள்ளனா். மேலும் வட்டாட்சியா்கள், துணை வட்டாட்சியா்கள் நிலை அலுவலா்கள் கொண்ட 30 நடமாடும் குழுவினா் வினாத்தாள்கள் உள்ளிட்ட தோ்வு பணி பொருட்களை தோ்வு மையங்களுக்கு கொண்டு செல்லுதல் மற்றும் விடைத்தாள்களை பெற்று வருதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள உள்ளனா். தோ்வு மையங்களுக்கு செல்ல வசதியாக அனைத்து இடங்களிலும் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் தோ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை சரியாக மேற்கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.கதிரேசன், டிஎன்பிஎஸ்சி பிரிவு அலுவலா் பாண்டியன், பறக்கும் படை அலுவலா்கள், நடமாடும் குழு அலுவலா்கள், ஆய்வு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

SCROLL FOR NEXT