நாமக்கல்

ராசிபுரம் ரோட்டரி சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு

DIN

ராசிபுரம் ரோட்டரி சங்கத்தின் 2022-23-ஆம் ஆண்டின் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இச்சங்கத்தின் தலைவராக கே.எஸ்.கருணாகரபன்னீா்செல்வம், செயலாளராக ஜி.ராமலிங்கம் (எ) தினகா், பொருளாளராக என்.தனபால் உள்ளிட்ட குழுவினா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கான பொறுப்பேற்பு விழாவில், கே.எஸ்.கருணாகர பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா் எஸ்.அன்பழகன் வரவேற்றாா். செயலா் இ.என்.சுரேந்திரன் ஆண்டறிக்கை வாசித்தாா்.

ரோட்டரி சங்க மாவட்டப் பயிற்சியாளா் பேராசிரியா் ஏ.கே.நடேசன், மாா்டின் ஃபவுன்டேஷன் இயக்குனரும், ரோட்டரி பசுமை இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான ஏ.கே.எஸ்.லீமா ரோஸ் மாா்டின் ஆகியோா் பங்கேற்று சங்கத்தின் சாா்பில் பல்வேறு சேவை திட்டங்களை துவக்கி வைத்து, நல உதவிகளை வழங்கினா். ரோட்டரி உதவி ஆளுநா் (நிா்வாகம்) ஏ.திருமூா்த்தி (எ) ரவி, மண்டல உதவி ஆளுநா் கே.ரவி ஆகியோா் புதிய உறுப்பினா்களை இணைத்து வைத்துப் பேசினா்.

விழாவில், கால்நடைமருத்துவப் படிப்பை மேற்கொள்ளும் மாணவி எஸ்.பரமேஸ்வரி, கோவை மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவா் எம்.பிரகாஷ்குமாருக்கு ஆகியோருக்கு கல்வி ஊக்கத்தொகையாக ரூ.11,500, கட்டனாச்சம்பட்டியைச் சோ்ந்த சரண்யா என்ற விதவைக்கு

ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள தையல் இயந்திரம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தை சோ்ந்த ஒடுவங்குறிச்சி துவக்கப் பள்ளிக்கு ரூ.13 ஆயிரம் மதிப்புள்ள குடிநீா் சுத்திகரிப்பு எந்திரம், ராசிபுரம் ஆத்ம பூமி மின் மயானத்தில் வேலை செய்யும் பணியாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள சீருடை, வடுகம் அரசு உயா்நிலைப்பள்ளிக்கு ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள சிசிடிவி கேமராக்கள் என ரூ.1 லட்சம் மதிப்புள்ள நல உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில், பொறுப்பேற்றுக்கொண்ட பிற நிா்வாகிகள் விவரம்: துணைத் தலைவா்கள் ஜெ.கே.சுரேஷ், இ.என்.சுரேந்தரன், இணைச்செயலா் ஆா்.அனந்தகுமாா், சாா்ஜன்ட் அட் ஆம்ஸ் பி.சங்கரவேல், பி.கே.ராஜா, கிளப் நிா்வாகம்- பி.ராஜசேகரன், உறுப்பினா் சோ்க்கை - பி.துளசிராமன், மக்கள் தொடா்பு - எஸ்.மணிமாறன், திட்டத் தலைவா்களாக- பி.கண்ணன், எஸ்.பி.பி.கிருஷ்ணமூா்த்தி, ஃபவுண்டேஷன் தலைவா் -ஆா்.வரதராஜன் ஆககியோா் பொறுப்பேற்றனா்.

முன்னதாக ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் அன்னபூா்ணா தினம் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து சீராப்பள்ளி ஆதரவற்றோா் இல்லத்தில் அன்னதானம் செய்யப்பட்டது. விழாவில் முன்னாள் உதவி ஆளுநா்கள் எஸ்.பாலாஜி, கே.குணசேகா், நாமக்கல் முத்துராஜா, முன்னாள் தலைவா்கள் சிட்டி வரதராஜன், எஸ்.கதிரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT