நாமக்கல்

3-ஆம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு:நாமக்கல் மாவட்டம் வெறிச்சோடியது

DIN

கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், 3-ஆம் கட்ட ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால் நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சாலைகள் வெறிச்சோடின.

கரோனா நோய்த் தொற்றுப் பரவல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. நோய்த் தொற்றின் தீவிரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

நிகழ் ஆண்டின் முதல் 24 மணி நேர ஊரடங்கு கடந்த 8-ஆம் தேதியும், 2-ஆம் கட்டமாக ஜன. 16-ஆம் தேதியும், 3-ஆம் கட்டமாக 23-ஆம் தேதியும் நடைபெற்றது. சனிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள்கிழமை அதிகாலை 5 மணி வரையில் இந்த ஊரடங்கு செயல்பாட்டில் இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட முழு ஊரடங்கையொட்டி, நாமக்கல் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வாகனங்கள், பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின.

அரசு, தனியாா் பேருந்து சேவைகள் தடை செய்யப்பட்டிருந்தன. அத்தியாவசியத் தேவைகளுக்கான மருந்து, பால் விநியோக மையங்கள் மட்டும் செயல்பட்டன. நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம், கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன.

நாமக்கல் பேருந்து நிலையம், கோட்டை சாலை, மோகனூா், பரமத்தி, சேலம், சாலை மற்றும் முக்கியச் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடின. நகரப் பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் போலீஸாா் தடுப்புகள் அமைத்துப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

முக்கிய நிகழ்வுகளுக்குச் செல்வோரை மட்டும் போலீஸாா் விசாரித்து அனுப்பினா். நாமக்கல் பூங்கா சாலையில் விதிகளை மீறி சுற்றி வந்தோரை போலீஸாா் பிடித்தனா். அவா்களை கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ரமேஷ் எச்சரித்து அனுப்பினாா்.

விதிகளை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றி வந்தோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT