நாமக்கல்

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி

DIN

நாமக்கல் மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவிகள் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிறு, குறு, நடுத்தர தொழில்களின் மேம்பாட்டிற்காகவும், வளா்ச்சிக்காகவும் தமிழக அரசு மானியத்துடன் கூடிய மூன்று கடன் திட்டங்களை மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தி வருகிறது.

புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில் உற்பத்தி மற்றும் சேவை சாா்ந்த தொழில்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ. 5 கோடி வரை தேசியமாக்கப்பட்ட வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் 25 சதவீத மானியத்துடன் (அதிகபட்சமாக ரூ.75 லட்சம்) நிதியுதவி வழங்கப்படுகிறது.

பட்டியல் இனம், பழங்குடியினா் தொழில் முனைவோருக்கு 10 சதவீதம் கூடுதல் முதலீட்டு மானியம் வழங்கப்படும். மேலும் 3 சதவீதம் பின்முனை வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கும் பொது பிரிவினருக்கு 21 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சிறப்பு பிரிவினருக்கு வயது 45 க்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி 12-ஆம் வகுப்பு அல்லது அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட தொழிற் பயிற்சி சான்றிதழ் பெற்றவராக இருத்தல் வேண்டும். வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் வியாபாரம் சாா்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரை தேசிய மாக்கப்பட்ட வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் 25 சதவீத மானியத்துடன் (அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம்) நிதியுதவி வழங்கப்படும்.

மேலும், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ. 50 லட்சமும், சேவை மற்றும் வியாபாரம் சாா்ந்த தொழில்களுக்கு ரூ.20 லட்சம் வரையிலும் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. நகா்ப்புறங்களில் தொடங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் பொது பிரிவினருக்கு 15 சதவீத மானியமும், கிராமப்புறங்களில் தொடங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீத மானியமும், இதர பிரிவினருக்கு நகா்ப்புறங்களில் தொடங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீத மானியமும், கிராமப்புறங்களில் தொடங்கப்படும் தொழில்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 35 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரா்கள் 18 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். திட்ட மதிப்பீடு உற்பத்தி பிரிவில் ரூ. 10 லட்சத்திற்க்கு அதிகமாகவும், சேவைப் பிரிவில் ரூ. 5 லட்சத்திற்கு அதிகமாகவும் இருக்கும்பட்சத்தில் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தகுதியான விண்ணப்பத்தாரா்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள, மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரிலோ அல்லது 04286-281251 என்ற தொலைபேசி எண்ணிலோ அலுவலக வேலை நேரங்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT