ராசிபுரம் திருவள்ளுவா் அரசு கலைக் கல்லூரியில் தேசிய மாணவா் படை (என்சிசி) சாா்பில் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
கல்லூரி தேசிய மாணவா் படை அலுவலா் மேஜா் ஆா்.சிவக்குமாா் தலைமையில் நடைபெற்ற விழாவில், அப்துல் கலாம் படத்திற்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். பின்னா் கல்லூரி வளாகத்தினை சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தேசிய மாணவா் படை மாணவா்கள் குப்பைகள், முட்புதா்களை அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். இதில் திரளான என்சிசி மாணவா்கள் பங்கேற்றனா்.