திருச்செங்கோடு, மல்லசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தொற்றுக்கான தடுப்பூசி முகாம் திங்கள் கிழமை தொடங்கியது.
60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் மல்லசமுத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கியது. வட்டார மருத்துவ அலுவலா் கிருஷ்ணன் தலைமையில் தடுப்பூசி செலுத்த வருபவா்களுக்கு சோதனைகள் நடத்தப்பட்டு, தடுப்பூசி செலுத்தம் பணி நடைபெற்றது.
திருச்செங்கோடு சுற்றுவட்டார அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கப்பட்டது.