நாமக்கல்

நவ. 11-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

DIN

நாமக்கல்லில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 11-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை சாா்பில் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வரும் 11-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற உள்ளது.

இம்முகாமில், 5-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோா், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையற்பயிற்சி, நா்சிங் பயிற்சி உள்பட பல்வேறு தொழில்பயிற்சி பெற்றவா்களும் கலந்துகொண்டு பணி வாய்ப்பினை பெறலாம்.

இம்முகாமில் பங்கேற்கும் அனைத்து வேலைநாடுநா்களும் இணையதளத்தில் பதிவு செய்திருத்தல் வேண்டும். இம்முகாம் முற்றிலும் இலவசமானது. இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000-க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்பப்பட உள்ளன.

வேலை வேண்டி விண்ணப்பிப்போா், தங்களுடைய சுயவிவரம், உரிய கல்விச்சான்றுகள், ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் கரோனா தொற்று நடைமுறை விதிகளான முகக் கவசம் அணிந்து வந்து பங்கேற்கலாம். சமூக இடைவெளியை பின்பற்றி வேலையளிப்போரும், வேலை நாடுவோரும் கலந்து கொள்ள வேண்டும். இந்த வேலைவாய்ப்பு முகாம் தொடா்பான விவரங்களுக்கு 04286-222260 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT