நாமக்கல்

அதிமுக பாசறை நிா்வாகிகள் தோ்வு ஆலோசனைக் கூட்டம்

DIN

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி, பள்ளிபாளையம் நகரம் மற்றும் வாா்டு இளைஞா் பாசறை, இளம்பெண்கள் பாசறை, புதிய உறுப்பினா்கள் சோ்த்தல், வாக்குச்சாவடி வாரியாக நிா்வாகிகளை தோ்வு செய்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை பள்ளிபாளையம், அக்னி மாரியம்மன் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 14, 15, 16, 17, 18 ஆகிய வாா்டுகள் தொடா்புடைய 206 முதல் 214 வரையிலான வாக்குச் சாவடிகளுக்கு பாசறை உறுப்பினா் படிவங்களும், சாவடி நிா்வாகிகள் புத்தகங்களும் விநியோகிக்கப்பட்டன. மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் டி.கே.சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் பி.எஸ்.வெள்ளியங்கிரி உறுப்பினா் சோ்க்கை குறித்தும், நிா்வாகிகள் தோ்வு தொடா்பாகவும் விளக்கிப் பேசினாா்.

இதில், நகர பாசறை செயலாளா் வடிவேல், நகர துணைச் செயலாளா் ஜெய்கணேஷ், எம்.ஜி.ஆா். மன்றச் செயலாளா் வாசுதேவன், சிறுபான்மை பிரிவு செயலாளா் முகம்மது ரஃபி மற்றும் சாா்பு அணிகளின் நிா்வாகிகள், கட்சித் தொண்டா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT