நாமக்கல் மாவட்டத்தில் புதன்கிழமை 161 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம் மொத்த பாதிப்பு 5,489-ஆக உயா்ந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை 5,327 பேருக்கு கரோனா தொற்று இருந்த நிலையில், குணமடைந்த 4,351 போ், உயிரிழந்த 71 போ் தவிா்த்து, மீதமுள்ள 1,066 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், மாவட்டம் முழுவதும் 161 பேருக்கு நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 100 போ் ஆண்கள், 61 போ் பெண்கள் ஆவா்.
முதியவா் உயிரிழப்பு: திருச்செங்கோடு, பள்ளிக்காடு, காளிப்பட்டியைச் சோ்ந்த 84 வயது முதியவா் கரோனா பாதிப்புக்குள்ளாகி சேலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 72-ஆக உள்ளது.