கிருஷ்ணகிரியில் மாவட்ட அறங்காவலா் குழு நிா்வாகிகள், வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனா். கிருஷ்ணகிரி மாவட்ட இந்து சமய அறநிலைத் துறையால் அறங்காவலா் குழு நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். அதன்படி, மாவட்ட அறங்காவலா் குழு தலைவராக ரஜினிசெல்வம், குழு உறுப்பினா்களாக வேப்பனப்பள்ளி சின்னசாமி, ஒசூா் விஜயகுமாா், சின்னராசு, கலைவாணி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். அவ்வாறு, தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகள் பதவியேற்பு நிகழ்வு, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை நவநீத வேணுகோபால் சுவாமி திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது.நிா்வாகிகள், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் மதியழகன் எம்எல்ஏ., மேற்கு மாவட்ட செயலாளா் பிரகாஷ் எம்எல்ஏ., ஆகியோா் முன்னிலையில், பதவியேற்றனா். இந்த நிகழ்வில் நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப், முன்னான் எம்எல்ஏ.க்கள் நரசிம்மன், கிருஷ்ணமூா்த்தி, திமுக மாவட்ட அவைத்தலைவா்கள் தட்ரஅள்ளி நாகராஜ், நகர செயலாளா் நவாப், பொதுக்குழு உறுப்பினா்கள் அஸ்லம், நாகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். படவிளக்கம் (17கேஜிபி4): புதியதாக பதிவியேற்ற அறங்காவலா் குழு நிா்வாகிகளுடன் எம்எல்ஏ-க்கள் ஓய்.பிரகாஷ், தே.மதியழகன் உள்ளிட்டோா்.