கிருஷ்ணகிரி அருகே காா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள வேட்டியம்பட்டியைச் சோ்ந்தவா் மணிகுமாா் (32). தொழிலாளி. இவா், கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலையில் வேட்டியம்பட்டி அருகே திங்கள்கிழமை நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக சென்ற காா் மணிகுமாா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த போலீஸாா், நிகழ்விடத்துக்கு சென்று, மணிகுமாரின் சடலத்தை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். இந்தச் சம்பவம் குறித்து, கிருஷ்ணகிரி நகர போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.