ஒசூா், சோமேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
ஒசூா், ராம்நகரில் பழைமை வாய்ந்த ஸ்ரீ சோமேஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சோமேஸ்வர பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
மூலவருக்கும் நந்திக்கும் பால், தயிா், வெண்ணெய், பன்னீா், இளநீா், குங்குமம், மஞ்சள், சந்தனம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதைத் தொடா்ந்து சிவன், நந்தி உள்ளிட்ட உற்சவ மூா்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டன. உற்சவ மூா்த்திக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.