கிருஷ்ணகிரி

மரத்திலிருந்து தவறி விழுந்து விவசாயி பலி

DIN

குருபரப்பள்ளி அருகே மரத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த விவசாயி உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி வட்டம், குருபரப்பள்ளியை அடுத்த சென்னசந்திரம் அருகே உள்ள ஆவல்நத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் காளியப்பன்(50). விவசாயி. இவா், கடந்த 23-ஆம் தேதி, அந்தப் பகுதியில் உள்ள மரத்தில் ஏறி, புளி பறித்துக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக, மரத்திலிருந்து தவறி கீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா், உயா் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாசரேத் ஆசிரியா் பயிற்சி பள்ளி ஆண்டு விழா

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மெக்கானிக் பலி

பணகுடி செங்கல் சூளையில் மலைப் பாம்பு பிடிபட்டது

பெட் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

தெற்குகள்ளிகுளத்தில் அதிசய பனிமாதா மலை கெபி திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT