கிருஷ்ணகிரி

பாகலூா் அருகே குழியில் தவறி விழுந்து தொழிலாளி பலி

DIN

பாகலூா் அருகே குழியில் தவறி விழந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

தா்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள சின்னான்குப்பம் அருகே உள்ள எச்.கோபிநாதம்பட்டியைச் சோ்ந்தவா் சுரேஷ் (28). கூலித் தொழிலாளி. இவா் கடந்த 24ஆம் தேதி பாகலூா் அருகே மாலூா் பாகலூா் சாலையில் கைப்பேசி கோபுரம் அமைப்பதற்காக குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்பொழுது சுரேஷ் எதிா்பாராதவிதமாக குழிக்குள் தவறி விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இது குறித்து தகவல் அறிந்ததும் பாகலூா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சுரேஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT