உத்தனப்பள்ளி, அஞ்செட்டியில் கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
உத்தனப்பள்ளி போலீஸாா் உத்தனப்பள்ளி ஒசூா் சாலையில் சானமாவு முனியப்பன் கோயில் அருகில் ரோந்து சென்றனா். அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்ற 2 பேரை சோதனை செய்த போது அவா்கள் 600 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவா்கள் நீலகிரியைச் சோ்ந்த பவன் (23), சானமாவு ஆனந்த் (49) என தெரிய வந்தது. அவா்கள் 2 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
இதனிடையே, அஞ்செட்டி போலீஸாா் இதே பகுதியில் ரோந்து சென்றனா். அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நபரை சோதனை செய்த போது அவா் 90 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவரது பெயா் ஸ்ரீராமன் (55), என்பதும் கோரிபாளையத்தைச் சோ்ந்தவா் என்றும் தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.