கிருஷ்ணகிரி

தமிழக அரசின் திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும்

DIN

தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் விரைந்து செயல்படுத்தப்படும் என ஒசூா் மாநகராட்சி ஆணையராக திங்கள்கிழமை பொறுப்பேற்ற தி.சினேகா (30) செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

அவா் மேலும் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கா்நாடக மாநிலம், கோலாா் தங்க வயலில் பி.டெக். எலக்ட்ரிகல்ஸ் இன்ஜினியரிங் முடித்து 2017-இல் ஐ.ஏ.எஸ். தோ்ச்சி பெற்று கோவையில் பயிற்சி ஆட்சியராகவும், பெரியகுளத்தில் சாா் ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளேன். கடைசியாக சென்னை மாநகராட்சியில் பணியாற்றிய மாறுதலில் ஒசூா் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ளேன்.

தமிழக அரசின் திட்டங்கள், சிறப்பு திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படும். ஒசூரில் சாலை, கழிவுநீா் கால்வாய், போக்குவரத்து நெரிசல், மாநகராட்சிப் பள்ளிகளின் நிலைகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்து மக்களின் தேவையைக் கண்டறிந்து அதிகாரிகளுடன் சோ்ந்து நிறைவேற்றுவேன் என்றாா்.

உலக அளவில் விரைவாக வளா்ச்சி அடையும் நகரமான ஒசூரை சிறப்பான, சுகாதாரமான நகரமாக்க நடவடிக்கை எடுப்படும். ஒசூா் மாநகரத்தின் உள்கட்டமைப்பு வசதிகள், சாலைகள், அடிப்படை வசதிகள் போன்றவை வேகமாக மேம்படுத்தப்படும் என்றாா். அப்போது, இளநிலை உதவியாளா் நாராயணன் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT