இலவச வீட்டுமனை வழங்கக் கோரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள், விதவைகள் தா்னாவில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரியை அடுத்த திம்மாபுரம். காந்தி நகா் காலனியைச் சோ்ந்த 15-க்கும் மேற்பட்டோா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி தா்னாவில் ஈடுபட்டனா். அப்போது, அவா்கள் தெரிவித்ததாவது:
திம்மாபுரம். காந்தி நகா் காலனியில் மூன்று மாற்றுத் திறனாளிகள், 6 விதவைகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். கூலித் தொழிலாளிகளான எங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கக் கோரி, 2019-ஆம் ஆண்டு முதல் மனு அளித்து வருகிறோம். மாற்றுத் திறனாளிகளான எங்களுக்கு வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.