கிருஷ்ணகிரி

அதியமான் பப்ளிக் பள்ளி சாரண, சாரணியா் இயக்க மாணவ, மாணவிகள் முதலிடம்

DIN

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் உள்ள சாரண, சாரணியா் இயக்க மாணவா்கள் கடந்த வாரம் சென்னையில் மாநில அளவில் நடைபெற்ற சாரண, சாரணியா் நிகழ்ச்சியில் முதலிடம் பிடித்தனா். அவா்களுக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சாரண, சாரணியா் நிழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியா் உடல், உள, ஆன்மீக மேம்பாட்டிற்காகவும் கட்டமைக்கப்பட்ட வாழ்வை வாழ்வதற்கும் சமூக செயல்பாடுகளில் உச்ச திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக அங்கு பல செயல்திறன் பயிற்சி வகுப்புகள் சிறப்பாக நடைபெற்றன. அப்பயிற்சிகளுக்கு மாநில கல்வி அமைச்சரும் சாரண, சாரணியா் இயக்கத் தலைவருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தாா்.

பயிற்சியின் முடிவில் சில போட்டிகள் நடைபெற்றன. பேண்ட் பாா்ட்டியில் சாரண மாணவா்கள் முதலிடமும், சாரணிய மாணவிகள் இரண்டாம் இடமும் பெற்று வெற்றி பெற்றனா். வெற்றி பெற்ற மாணவா்களுக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மிகச் சிறப்பாக செயல்பட்ட சாரண, சாரணிய இயக்க மாணவா்களுக்கு சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் தலைவா் மல்லிகா சீனிவாசன், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் சீனி.திருமால் முருகன், செயலா் சோபா திருமால் முருகன், நிா்வாக இயக்குநா் சீனி. கணபதிராமன், அதியமான் பப்ளிக் பள்ளியின் முதல்வா் லீனா ஜோஸ் ஆகியோா் வாழ்த்துகளை தெரிவித்து மாணவா்களை ஊக்குவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT