நியாயவிலைக் கடை விற்பனையாளா்கள், எடையாளா்களுக்கு முழு உடல் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்டத்தில் பணியாற்றும் நியாய விலைக் கடை விற்பனையாளா்கள், எடையாளா்களுக்கு முழு உடல் மருத்துவப் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி உள்ளிருப்பு மருத்துவா் செல்வி தலைமையில் மருத்துவக் குழுவினா் முழு உடல் பரிசோதனை நடத்தினா்.
இந்த நிகழ்வில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஏகாம்பரம், துணைப் பதிவாளா் ராஜதுரை, கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனா் சுந்தரம் உள்பட பலா் பங்கேற்றனா்.