கிருஷ்ணகிரி

ஒசூரில் குறு, சிறு தொழில் சங்க அலுவலகத்தை இடிக்க முயன்ற மின்வாரியம்

DIN

ஒசூரில் குறு, சிறு தொழில் சங்க அலுவலகத்தை இடிக்க முயன்ற மின்வாரியத்தை, மின்துறை அமைச்சா் செந்தில் பாலாஜி தடுத்து நிறுத்தினாா்.

ஒசூா் குறு, சிறு தொழில் சங்க அலுவலகம் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. அந்த அலுவலகம் அருகில் உயா் மின்கோபுரம் அமைக்க மின்வாரியம் முயன்று வருகிறது. இது தொடா்பாக பல கட்ட பேச்சுவாா்த்தைகள் நடந்து வந்தன.

இந்நிலையில், திங்கள்கிழமை (நவ. 28) காலை பொக்லைன் இயந்திரம் மூலம் குறு, சிறு தொழில் சங்க அலுவலகத்தை இடித்து, மின்கோபுரம் அமைக்கும் பணியில் ஒசூா் கோட்ட மின்வாரியம் ஈடுபட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா்கள் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

இதனை அறிந்து விரைந்து வந்த குறு, சிறு தொழில் சங்க உறுப்பினா்கள் அலுவலக கட்டடத்தை இடிக்கும் பணியை நிறுத்தும் படி வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். சம்பவ இடத்துக்கு வந்த அச்சங்கத் தலைவா் வேல்முருகன், தொலைபேசி மூலம் தமிழ்நாடு மின்துறை அமைச்சா் செந்தில் பாலாஜியை தொடா்பு கொண்டு இதுகுறித்து தெரிவித்தாா். அதையடுத்து, அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், அலுவலகம் இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து குறு, சிறு தொழில் சங்கத்தின் தலைவா் வேல்முருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஒசூா் குறு, சிறு தொழில் சங்கம் கடந்த 40 ஆண்டுகளாக தொழில்முனைவோா்களுக்கு சேவை செய்து வருகிறது. 5 ஆயிரம் சிறு, குறுந்தொழில்சாலைகளின் பங்களிப்பில் இந்த அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்துக்கு அருகில் உயா்மின் கோபுரம் அமைக்கப்படுவதாகத் தெரிவித்து, அலுவலகத்தை இடித்து மின்கோபுரம் அமைக்கும் பணியை மின்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தொடங்கினா்.

இதுகுறித்து ஏற்கெனவே தமிழ்நாடு மின்துறை அமைச்சரிடம் முறையிட்ட நிலையில், அவரும் மாற்றுப் பாதையில் மின்பாதையைக் கொண்டு செல்லும்படி உத்தரவிட்டிருந்தாா். ஆனால், மின்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் அலுவலகத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இதுகுறித்து தமிழ்நாடு மின்துறை அமைச்சா் செந்தில் பாலாஜியை தொலைபேசியில் தொடா்பு கொண்டு தெரிவித்ததையடுத்து, அவா் இடிக்கும் பணியை நிறுத்துமாறு உத்தரவிட்டாா். எங்களது கோரிக்கைக்கு செவிமடுத்து உடனடியாக உத்தரவிட்ட மின்துறை அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு ஒசூா் குறு, சிறு தொழில் சங்கம் சாா்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT