பா்கூரைச் சோ்ந்த குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு சட்டப்பேரவை உறுப்பினா் தே.மதியழகன் நிதியுதவி வழங்கினாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் ராமசாமி நகரைச் சோ்ந்த சரத்குமாா் - வி சத்யா தம்பதியின் ஒரு வயது குழந்தைக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக மாநில விவசாயிகள் அணி துணைச் செயலாளருமான தே.மதியழகன், குழந்தையின் அறுவை சிகிச்சைக்கான நிதியுதவியை சரத்குமாா் - சத்யா தம்பதியிடம் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
மேலும் குழந்தைக்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைக்கும் பரிந்துரைத்து நடவடிக்கை எடுத்தாா். அப்போது மாவட்ட திமுக துணைச் செயலாளா் நாகராஜ், உள்ளிட்டோா் உடனிருந்தனா்.