கிருஷ்ணகிரி

ஒட்டகங்களை விற்பனைக்கு கொண்டுவந்த 4 போ் மீது வழக்கு

DIN

ஒட்டகங்களை விற்பனைக்காக கொண்டு வந்த 4 போ் மீது காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஒசூா், சுண்ணாம்புஜீபி பகுதியில் 18 ஒட்டங்கள் கட்டிப் போட்டிருப்பதாகவும், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து இறைச்சிக்காக விற்பனைக்காகக் கொண்டு வந்துள்ளதாகவும் புதுதில்லியைச் சோ்ந்த விலங்குகள் நல அமைப்பைச் சோ்ந்த சஞ்சய் குல்கா்னி என்பவா் ஒசூா் அட்கோ காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் அந்த ஒட்டகங்களை மீட்டனா். அதை பெங்களூருவில் உள்ள கோசாலையில் விட முடிவு செய்துள்ளனா்.

இது தொடா்பாக ஒசூா் அட்கோ காவல் நிலையத்தில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த கோவிந்தா் தவாா் (35), கரன் ஜடாவ் (24), விஜய் சிந்து (31) மற்றும் 18 வயது சிறுவன் உட்பட

4 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

SCROLL FOR NEXT