ஊத்தங்கரை அடுத்த திப்பம்பட்டி பகுதியை சோ்ந்த 14 வயது சிறுமி, 10 ம் வகுப்பு படித்து வந்த மாணவியிடம், ஆசை வாா்த்தை கூறி கடத்திச் சென்று, திருமணம் செய்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
இது குறித்து சிறுமியின் தந்தை ஊத்தங்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், திப்பம்பட்டி பகுதியை சோ்ந்த ராஜேந்திரன்(29) என்பவரை, ஊத்தங்கரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனா்.