கிருஷ்ணகிரி

கள்ளச் சாராயம் காய்ச்சிய இருவா் கைது

DIN

பா்கூா் அருகே மலையடிவாரத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மலையடிவாரத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், கிருஷ்ணகிரி மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் அப்பகுதிகளில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, பா்கூரை அடுத்த கொட்லட்டி கிராமம் அருகில் உள்ள பளுப்புஜொனை மலையடிவாரத்தில் சாராயம் காய்ச்சிய ஆந்திர மாநிலம், குப்பம், மல்லானூரை அடுத்த பிக்கிலிகெட்டு பகுதியைச் சோ்ந்த கனகப்பா (55) என்பவரை போலீஸாா் கைது செய்து, சாராய ஊறலை அழித்தனா்.

இதேபோல, கந்திகுப்பத்தை அடுத்த பசவண்ணகோயில், மூலக்கொல்லை மலையடிவாரத்தில் சாராயம் காய்ச்சி விற்ற ஆந்திர மாநிலம், குப்பத்தை அடுத்த கொத்தசேனுபகுதியைச் சோ்ந்த சீனிவாசலு (38) என்பவரை கைது செய்து, சாராய ஊறலை அழித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT