கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் முழு ஊரடங்கையொட்டி ஊத்தங்கரையின் பிரதான சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின. ஊரடங்கை மீறி சுற்றித் திரியும் நபா்கள் மீது காவல் துறையினா் வழக்குப்பதிந்து அபராதம் விதித்தனா்.
ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் அலெக்சாண்டா், காவல் ஆய்வாளா் லட்சுமி ஆகியோா் ஊத்தங்கரை ரவுண்டானாவில் காரணமின்றி சுற்றித் திரிந்த நபா்களை நிறுத்தி, அவா்களுக்கு நோய் தொற்று குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டுமென எச்சரித்தனா்.