கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் ஒசூா், மீரா மஹாலில் திங்கள்கிழமை (டிச. 5.) மாலை 4 மணியளவில் நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக திமுக மேற்கு மாவட்டச் செயலாளரும் ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவா் அ.யுவராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெறுகிறது. பேராசிரியா் அன்பழகன்நூற்றாண்டு விழா குறித்தும், மக்களவைத் தோ்தலுக்கு பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்களை நியமிப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
இதில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாவட்ட நிா்வாகிகள் முன்னிலை வகிப்பா்.
கூட்டத்தில் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், மாநகர, ஒன்றிய, பேரூா், பகுதி கழக செயலாளா்கள், அனைத்து அணிகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூா் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், இன்னாள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், வாா்டு செயலாளா்கள், கிளை செயலாளா்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.