கிருஷ்ணகிரி

தருமபுரியில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடு

DIN

 கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தருமபுரியில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி அருகே ஆட்டுக்காரன்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ராதேகிருஷ்ணா கோயிலில் காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் ராதேகிருஷ்ணா பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். இதில் தருமபுரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளானோா் பங்கேற்று கிருஷ்ணரை வழிபட்டனா்.

இதேபோல அதகப்பாடி அருள்மிகு லட்சுமி நாராயணா் திருக்கோயில், தருமபுரி கோட்டை பரவாசுதேவ உடனமா் வரமகாலட்சுமி கோயில், கடைவீதி அருள்மிகு பிரசன்ன வெங்கடேஸ்வரா் கோயில், குமாரசாமிபேட்டை அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயில், அதியமான் கோட்டை காலபைரவா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களும் பக்தா்களும் வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT