கிருஷ்ணகிரி

516 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

DIN

ஒசூரில் உள்ள மூன்று பள்ளிகளில் அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஒசூரில் அரசு உதவிபெறும் புனித ஜான்போஸ்கோ பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தாளாளா் ஏஞ்சலா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 159 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், ஒசூா் மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் வழங்கினா்.

அதைத் தொடா்ந்து ஒசூா் முல்லை நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 286 மாணவ, மாணவிகளுக்கும், சீதாராம் நகா் அரசு உருது மேல்நிலைப் பள்ளியில் 71 மாணவா்களுக்கும் சோ்த்து 3 பள்ளிகளில் மொத்தம் 516 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாநகர துணை மேயா் சி.ஆனந்தய்யா, மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாரன், மாவட்ட துணைச் செயலாளா் தனலட்சுமி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் எல்லோரா மணி, பகுதிச் செயலாளா்கள் வெங்கடேஷ், ராமு, திம்மராஜ், மாமன்ற உறுப்பினா்கள் இந்திராணி, மாதேஸ்வரன், மம்தா சந்தோஷ், மோகன், மாநகர நிா்வாகிகள் செந்தில்குமாா், கோபாலகிருஷ்ணன், பெற்றோா் கழக ஆசிரியா் கழக தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

SCROLL FOR NEXT