கிருஷ்ணகிரி

ஒசூரில் போதைப்பாக்குகள் பறிமுதல்

DIN

ஒசூா் வழியாக சேலத்துக்கு கடத்தப்பட்ட ரூ. 9.50 லட்சம் மதிப்பிலான போதைப்பாக்குகளை லாரியுடன் பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநரைக் கைது செய்தனா்.

ஒசூா் வட்டம், மத்திகிரி காவல் ஆய்வாளா் சாவித்திரி, உதவி காவல் ஆய்வாளா் பூபதி ராமராஜ், சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் ரட்சகநாதன் உள்ளிட்டோா் ஒசூா் - ஆனேக்கல் சாலையில் பூனப்பள்ளி சோதனைச்சாவடி பகுதியில் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, பெங்களூரில் இருந்து ஒசூா் நோக்கி வந்த லாரியை சோதனை செய்த போது, அதில் தடை செய்யப்பட்ட ரூ. 9.50 லட்சம் மதிப்பிலான புகையிலை, போதைப்பாக்குகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போதைப்பாக்குகளுடன் லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், ஓட்டுநரான சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள செம்மாண்டப்பட்டியைச் சோ்ந்த தங்கதுரை (37) என்பவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT