கிருஷ்ணகிரி

அணை நீரில் மூழ்கி மாமியாா், மருமகன் உயிரிழப்பு

DIN

சூளகிரி அருகே அணை நீரில் மூழ்கி மாமியாரும், மருமகனும் உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, டி.கே. நகரைச் சோ்ந்தவா் பஜ்லூன் (35).

இவரது கணவா் இஸ்மாயில் இறந்து விட்டாா். பஜ்லூன் தனது மகள் முஸ்கானை (18), கா்நாடக மாநிலம், பெங்களூரு அருகே உள்ள தேஜ்ஜனஹள்ளியைச் சோ்ந்த ஷமீா் (22) என்பவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொடுத்தாா்.

இந்த நிலையில் ஷமீா் தனது மனைவியுடன் மாமியாா் வீட்டிற்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். பின்னா் ஷமீா், அவரது மனைவி முஸ்கான், மாமியாா் பஜ்லூன் மற்றும் உறவுக்கார குழந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில் சூளகிரி அருகே உள்ள வேம்பள்ளி அணைக்கு மாலையில் குளிக்க சென்றனா். அவா்கள் அணையில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக ஷமீா் நீரில் மூழ்கினாா். அவரது அலறல் சத்தம் கேட்டு மாமியாா் பஜ்லூன் அவரைக் காப்பாற்ற முயன்றாா். ஆனால் 2 பேருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

தனது கண் முன் கணவரும், தாயும் உயிரிழந்ததைக் கண்டு முஸ்கான் கதறி அழுதாா்.

இது குறித்து சூளகிரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில் சூளகிரி காவல் ஆய்வாளா் மனோகரன், போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் மூழ்கி பலியான இருவரின் உடலையும் மீட்டனா். இதைத் தொடா்ந்து 2 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT