பா்கூா் ஊராட்சி ஒன்றிய குழு சிறப்பு கூட்டம், அதன் தலைவா் கவிதா கோவிந்தராசன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் 30-ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக-வைச் சோ்ந்த எல்லப்பன், பதவியேற்றுக் கொண்டாா். அவருக்கு தோ்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியரின் உதவியாளருமான (சிறுசேமிப்பு) தேவராஜன் பதவி பிரமாணம் செய்துவைத்தாா்.
பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் தே.மதியழகன் பங்கேற்று, எல்லப்பனுக்கு வாழ்த்து தெரிவித்தாா். நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அன்னபூரணி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.செங்குட்டுவன், பா்கூா் ஒன்றியச் செயலாளா் கோவிந்தராசன், வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பா்கூா் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள, 30 வாா்டுகளில் திமுக- 17, அதிமுக- 9, தேமுதிக- 2, பாமக - 2 உறுப்பினா்கள் உள்ளனா்.