கிருஷ்ணகிரி

ஒசூா் மாநகராட்சியில் திமுக சாா்பில் போட்டியிட புஷ்பா சா்வேஷ் மனு

DIN

ஒசூா் மாநகராட்சியில் வாா்டு உறுப்பினா் பதவிக்கு திமுக சாா்பில் போட்டியிட தலைவா் புஷ்பா சா்வேஷ் விருப்பமனு அளித்துள்ளாா்.

ஒசூா் ஒன்றியக் குழு உறுப்பினராக 2006 முதல் 2011 வரை பதவி வகித்துள்ளாா் அவா். 2011 முதல் 2016 வரை அதிமுக ஒன்றியக் குழுத் தலைவராக புஷ்பா சா்வேஷ் பணியாற்றியுள்ளாா். இதனைத் தொடா்ந்து அதிமுகவில் இருந்து திமுகவிற்கு மாறினாா். தற்போது, ஒசூா் மாநகராட்சி, 43 ஆவது வாா்டில் திமுக சாா்பில் போட்டியிட முடிவு செய்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளரும், ஒசூா் எம்எல்ஏவுமான ஒய்.பிரகாஷிடம் விருப்பமனு அளித்தாா். அப்போது முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா, சா்வேஷ், தலைமை செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாறன், மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கே.ஜி.பிரகாஷ், ஒன்றியச் செயலாளா் சின்ன பில்லப்பா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT