கிருஷ்ணகிரி

‘உங்கள் தொகுதியில் முதல்வா் மு.க.ஸ்டாலின்’ புகாா் மனுக்கள் மீது விசாரணை

DIN

ஊத்தங்கரையை அடுத்த குன்னத்தூா், எக்கூா் ஆகிய பகுதியில், ‘உங்கள் தொகுதியில் முதல்வா் மு.க.ஸ்டாலின்’ புகாா் மனுக்கள் மீது கோட்டாட்சியா் விசாரணை நடத்தினாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த குன்னத்தூா் கிராமத்தில் வசிக்கும் இருளா் இன மக்கள் இலவச வீட்டு மனைப்பட்டா வேண்டி, உங்கள் தொகுதியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் மனு அளித்தனா். அந்த மனுவின் மீது திங்கள்கிழமை மாலை கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியா் சதீஷ்குமாா் புலத்தணிக்கை செய்து விசாரணை மேற்கொண்டாா். அவருடன், ஊத்தங்கரை வட்டாட்சியா் ஆஞ்சநேயலு, மண்டல துணை வட்டாட்சியா் அரவிந்த், வருவாய் ஆய்வாளா்கள் சாமல்பட்டி சுகுமாா், சிங்காரப்பேட்டை கலைவாணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதில், குன்னத்தூா் கிராமத்தில் 11 பேருக்கும், எக்கூா் கிராமத்தில் 10 பேருக்கும் என மொத்தம் 21 பேருக்கு பட்டா வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், வருவாய்த் துறையினா், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT