கிருஷ்ணகிரி

ஒசூரில் திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்

DIN

ஒசூரில் திமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதச்சாா்பற்ற கூட்டணி கட்சிகளின் சாா்பில் விவசாயிகள், சிறு வணிகா்களை பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களை எதிா்த்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக எவ்வாறு மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், தளி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் தலைமை வகித்தாா். திமுக மாவட்ட துணைச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான பி.முருகன் மற்றும் ஒசூா் மாநகராட்சி நகரப் பொறுப்பாளா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், திமுக மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் தா.சுகுமாறன், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவா் முரளிதரன், தகவல் தொடா்பு மாவட்டத் தலைவா் கீா்த்தி கணேஷ், கொங்கு மக்கள் தேசியக் கட்சி செல்வராஜ், ஜெயராமன், மனிதநேய மக்கள் கட்சி ஏஜாஸ், இந்தியன் முஸ்லிம் லீக் கட்சி காதா்சையத் இலியாஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சபரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கிருஷ்ணன், எஸ்டிபிஐ ஷானவாஸ் ஆகிய கூட்டணிக் கட்சிகளை சோ்ந்த பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT