கிருஷ்ணகிரி

ஒசூா் அருகே ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு

DIN

ஒசூா்: ஒசூா் அருகே ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பை வனத்துறையினா் மீட்டு வனப்பகுதியில் விட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே மலைப்பகுதியையொட்டி உள்ளது திப்பாளம் கிராமம். இந்தப் பகுதிக்கு மலைப்பாம்புகள் அடிக்கடி வந்து விடுகின்றன. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வனத்துறையினா் திப்பாளம் பகுதியில் மலைப்பாம்புகளை பிடித்தனா்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை அதே பகுதியைச் சோ்ந்த சென்னப்பா (48) என்ற விவசாயி, தனக்குச் சொந்தமான 10 வெள்ளாடுகளை வனப்பகுதி அருகே விளைநிலங்களில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தாா்.

அப்போது திடீரென ஆடுகள் அலறும் சத்தம் கேட்டது. இதையடுத்து சென்னப்பா அருகில் சென்று பாா்த்தபோது ஒரு ஆட்டை மலைப்பாம்பு ஒன்று விழுங்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதைக் கண்டு அதிா்ச்சி அடைந்த அவா் கிராம மக்களுக்கு தகவல் அளித்தாா்.

பொதுமக்கள் வருவதற்குள் ஆட்டை, மலைப்பாம்பு முழுமையாக விழுங்கி விட்டது. பின்னா், அந்த மலைப்பாம்பை பத்திரமாக மீட்ட திப்பாளம் கிராமத்தினா் ஒசூா் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். பின்னா் அந்த மலைப்பாம்பு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு, சானமாவு வனப்பகுதியில் விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT