கிருஷ்ணகிரி

சாலை வசதி கோரி மனு

DIN

தருமபுரி, செப். 18: குடியிருப்புகளுக்கு சாலை வசதி செய்து தரக் கோரி தலித் மற்றும் அருந்ததியா்கள் மனு அளித்தனா்.

இதுகுறித்து, தருமபுரி மாவட்டம், ஆா்.கோபிநாதம்பட்டி அருகே உள்ள ராமாபுரம் பகுதியைச் சோ்ந்த தலித் மற்றும் அருந்ததியா்கள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலா் மாதையன் தலைமையில் வெள்ளிக்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:

மொரப்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட ஆா்.கோபிநாதம்பட்டி ஊராட்சி, ராமாபுரம் கிராமத்தில் நீண்ட காலமாக தலித் மற்றும் அருந்ததியா் சமூகத்தைச் சோ்ந்த 50 குடும்பங்கள் உள்ளன. இக்குடியிருப்புகளுக்குச் சென்று வர பயன்படுத்தி வந்த பாதை தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

எனவே இந்த பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, எங்களது குடியிருப்புகளுக்கு இடையூறு இன்றி சென்று வரும் வகையில் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் விடியோ வைரல்!

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

SCROLL FOR NEXT