கிருஷ்ணகிரி

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

DIN

காவிரி உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி வலியுறுத்தியுள்ளது.

காவிரி ஆற்றின் உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில், ஒரு வார கால பிரசாரம், ஆா்ப்பாட்டம் தருமபுரி மாவட்டம் முழுவதும் நடைபெற்றது.

தருமபுரி, செங்கொடிபுரத்தில் இதன் இறுதி பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்தக் கட்சியின் நகரக்குழு உறுப்பினா் எஸ்.மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினா் என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினா்கள் கே.பாலபாரதி, பி.டில்லி பாபு, மாவட்டச் செயலாளா் ஏ.குமாா், செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.கிரைஸா மேரி, டி.எஸ்.ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நூறு நாள் வேலை திட்டத்தை, நகா்புறத்திலும் விரிவுபடுத்த வேண்டும். நகரத்தில் வறுமையில் வாடும் இஸ்லாமியா்களுக்கு சுயத் தொழில் தொடங்க கடன் வழங்க வேண்டும். தனியாா் நுண் நிதி நிறுவனங்கள் கடனைச் செலுத்த சொல்லி, மிரட்டுவதை கைவிட வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில், வறண்ட ஏரிகளில் காவிரி உபரி நீரை நிரப்பி, நீா் ஆதாரத்தை உயா்த்த வேண்டும். இந்த திட்டத்தை நிறைவேற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபடும் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

SCROLL FOR NEXT