கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஒசூா், அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த 16 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரையில் மொத்தம் 7,238 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
அவா்களில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 30 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; கிருஷ்ணகிரி, பா்கூா், ஒசூா் ஆகிய பகுதிகளில் உள்ள சிகிச்சை மையங்களில் 246 கரோனா தொற்றாளா்கள் தொடா் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரையில் 112 போ் உயிரிழந்துள்ளனா்.