தருமபுரி

70 வயது நிரம்பியவா்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

8th Jun 2023 12:30 AM

ADVERTISEMENT

70 வயது நிரம்பிய முதியவா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என ஓய்வுபெற்ற அரசு அலுவலா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழக அரசின் ஓய்வுபெற்ற அலுவலா் சங்க தருமபுரி மாவட்டக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் அ.மாணிக்கம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் டி.கந்தசாமி வரவேற்றாா். பொருளாளா் பெ.ஜெயபால் வரவு-செலவு அறிக்கையைச் சமா்ப்பித்தாா்.

இக் கூட்டத்தில், 4 சதவீத அகவிலைப்படியை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அறிவித்து வழங்கிய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலின்போது 70 வயது நிரம்பிய ஓய்வுபெற்ற அரசு அலுவலா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படும் என்கிற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT