மது போதையிலிருந்த தலைமைக் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
தருமபுரி மாவட்டம், அரூா் கிளைச் சிறையில், சிறைக் கட்டுப்பாட்டு அலுவலா் தமிழ்ச்செல்வன் அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அரூா் கிளைச் சிறையில் பணியில் இருந்த தலைமைக் காவலா் அசோக்குமாா் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, தலைமைக் காவலா் அசோக்குமாரை பணியிடை நீக்கம் செய்து, சேலம் மத்திய சிறைக் கண்காணிப்பாளா் (பொறுப்பு) மதிவாணன் அண்மையில் உத்தரவிட்டுள்ளாா்.