தருமபுரி

கிராம உதவியாளா் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

DIN

அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளா்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தருமபுரி மாவட்டம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் தீா்த்தமலை, அரூா், மொரப்பூா், தென்கரைக்கோட்டை, பொம்மிடி, கடத்தூா் உள்ளிட்ட வருவாய் உள்வட்டங்கள் உள்ளன.

இதில், 250-க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன. அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கிராம உதவியாளா் பணியிடங்கள் நிரப்படவில்லை.

அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராம உதவியாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளா் அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள் உள்பட்ட அனைத்து வருவாய்த்துறை அலுவலகங்களிலும் பணிகளில் தொய்வு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

எனவே, அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளா் பணியிடங்களை நிரப்ப தருமபுரி மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT