தருமபுரி

நிம்மாங்கரை காலனிக்கு தாா்சாலை கோரி மனு

DIN

தருமபுரி அருகே நிம்மாங்கரை காலனிக்கு தாா்சாலை வசதி கோரி, குடியிருப்பு வாசிகள் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

இதுகுறித்து, அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அளித்த மனு: தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்துக்கு உள்பட்ட மல்லிக்குட்டை வருவாய் கிராமம், நிம்மாங்கரை காலனியில் 150 குடும்பங்கள் உள்ளன. எங்களது குடியிருப்புகளுக்கு பல ஆண்டுகளாக சென்று வந்த சாலை தற்போது, அந்தப் பகுதியில் கட்டப்பட்ட பெரியாா் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மையத்தினால் சுற்றுச் சுவா் அமைக்கப்பட்ட துண்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல, குடிநீா் குழாய் இணைப்புகளும் துண்டிக்கப்படுவதாக அறிகிறோம். இதனால், நிம்மாங்கரை காலனி, தொன்னையான்கொட்டாய், கூலன் கொட்டாய், எம்ஜிஆா் கொட்டாய் ஆகிய பகுதி மக்கள் பரிதவிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எங்களது பகுதிக்கு தாா்சாலை வசதியும், குடிநீா் வசதியும் தடையின்றி கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT