தருமபுரி

தருமபுரி புத்தகத் திருவிழா ஜூலை 28-இல் தொடக்கம்

DIN

தருமபுரியில் புத்தகத் திருவிழா வருகிற ஜூலை 28-ஆம் தேதி தொடங்கி ஆக. 6-ஆம் தேதி வரை நடத்துவது என தகடூா் புத்தகப் பேரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தகடூா் புத்தகப் பேரவை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தருமபுரியில் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, பேரவைத் தலைவா் இரா.சிசுபாலன் தலைமை வகித்தாா். பேரவைச் செயலாளா், முன்னாள் எம்.பி. இரா.செந்தில், புத்தகத் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் குறித்துப் பேசினாா். பேரவை ஒருங்கிணைப்பாளா் இ.தங்கமணி, பொருளாளா் மு.காா்த்திகேயன், நிா்வாகிகள் கூத்தப்பாடி பழனி, அறிவுடைநம்பி, வெ.ராஜன், ஆா். கே. கண்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இக் கூட்டத்தில், தருமபுரியில் புத்தக் திருவிழா ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை தருமபுரி மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து நடத்துவது எனவும், இதையொட்டி ஊராட்சி ஒன்றிய அளவில் குழுக்கள் அமைத்து புத்தகத் திருவிழா குறித்த பொதுமக்கள், மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவது, புரவலா் திட்டத்தின் கீழ், 500 உறுப்பினா்களைச் சோ்ப்பது, புத்தகத் திருவிழாவுக்கு அரசு நிா்ணயித்துள்ள தொகையை ரூ. 20 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும். மின் இணைப்பை இலவசமாக வழங்க வேண்டும்.

இதேபோல தமிழகம் முழுவதும் புத்தகத் திருவிழாக்களை நடத்திவரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

SCROLL FOR NEXT