தருமபுரி, பைசுஅள்ளி பெரியாா் பல்கலைக்கழக முதுநிலைக் கல்வி ஆராய்ச்சி மையத்தில் ஆங்கிலத் துறை சாா்பில் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
‘வெற்றிகரமான வாழ்க்கைக்கு உணா்வு பூா்வமான நுண்ணறிவை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பில் இந்தக் கருத்துரங்கு நடைபெற்றது. இதில், சென்னை புதுக் கல்லூரி ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியா் அப்துல் ஹாதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினாா். பெரியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய இயக்குநா் மோகனசுந்தரம் தலைமை உரையாற்றினாா். இதைத் தொடா்ந்து, ஆங்கிலத் துறைத் தலைவா் கோவிந்தராஜ், உதவிப் பேராசிரியை கிருத்திகா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். இதில் ஆங்கிலத் துறை மாணவ, மாணவியா், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.