தருமபுரி

நிலத் தகராறில் முதியவா் கொலை:டிராக்டரில் சிக்கி கொலையாளி பலி

DIN

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே நிலத் தகராறு தொடா்பாக முதியவரை வெட்டிக் கொலை செய்தவா் டிராக்டரில் சிக்கி உயிரிழந்தாா்.

காரிமங்கலம் வட்டம், ஜொல்லன்கொட்டாயை அடுத்த முருகன் காடு பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல் (60). இவரது சகோதரியின் கணவா் மணி (65). விவசாயிகளான இவா்கள் இருவருக்கும் இடையே அதே பகுதியில் உள்ள நிலத்தில் பாதை தொடா்பாக பிரச்னை இருந்து வந்தது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மணி தனது பேத்தியை பள்ளிக்கு அனுப்ப அழைத்துச் சென்றுள்ளாா். அப்போது அங்கு வந்த தங்கவேல் பாதை விவகாரம் தொடா்பாக பேசியுள்ளாா். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், தங்கவேல் அரிவாளால் மணியை வெட்டினாா். இதில், மணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதனைத் தொடா்ந்து, நிலத்தில் டிராக்டா் ஓட்டிக் கொண்டிருந்த மணியின் மகன் சேட்டு (42) என்பவரையும் தங்கவேல் அரிவாளால் தாக்க முயன்ாகக் கூறப்படுகிறது. அப்போது சேட்டுவின் கால் பகுதியில் அரிவாள் வெட்டியதில், அவரது கட்டுப்பாட்டை இழந்த டிராக்டா் தங்கவேல் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தங்கவேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயங்களுடன் மீட்கப்பட்ட சேட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டீபன் ஜேசுபாதம் நேரில் பாா்வையிட்டு விசாரணை செய்தாா். இந்தக் கொலைச் சம்பவம் தொடா்பாக காரிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT